"பட்டாம்பூச்சி பற பற" - நாம் அன்றாடம் கடந்து செல்லும் மனிதர்களையும் நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் உள்ளடக்கிய எளியக் கதையே.
மாறி வரும் சமூகச் சூழலில் மனித உறவுகளிடையே ஏற்படும் சவால்களுக்கும், காலம் காலமாக அழுத்தமாக மனதில் ஊறிய பழமையான எண்ணங்களுக்கும் இடையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு போர் நடந்துக்கொண்டே இருக்கிறது. அந்த யுத்தத்தின் சில கோணங்களைக் கதையின் போக்கில் லேசாகத் தொட்டு செல்ல முயன்றுள்ளேன்.
மெல்லிய காதல் உணர்வுகள் இழையோடும் இக்கதை உங்கள் மனதிலும் நீங்காது இடம்பிடிக்கும் என நம்புகிறேன். வாசித்து மகிழுங்கள்.
அன்புடன்,
ஹேமா ஜெய்