இது என் பார்வை. என் கனவு. என் கனவில் விரிந்த உலகம்.
பள்ளிக்கூட நாட்களில் சினிமா நாயகர்களுக்கு பதிலாக எழுத்தாளர்களை ஆதர்சமாய்க் கொண்டிருந்தேன்.
எழுபதுகளின் இறுதியில் என் சிறுகதைகள் பிரசுரமாகத் துவங்கின. பிறகு குறுநாவல்கள். நாவல்கள்.
நாவல்கள் எழுத்தாளனைப் பிரபலப்படுத்தலாம். சிறுகதைகளின் வீச்சும் வெளிப்பாடும்தான் அவனைச் சரியாக அடையாளம் காட்டும்.
இது என் முதல் சிறுகதைத் தொகுதி.
இந்தக் கனவளவு உலகம் நிஜ உலகத்தின் நீட்சிதான். காலத்தை ஜெயித்து ஞாபக நரம்புகளில் கனவென உறைந்துபோன செல்லுலாய்ட் சிற்பங்கள்.
- எஸ். குமார்