எல்லோருக்கும் சிந்திக்கும் திறனோடு மூளை உண்டென்றால், ஜே.எஸ். ராகவனுக்கு மட்டும் சிரிக்கும் திறனோடு இருக்கும்போல. விபரீதமான, விவகாரமான, அசாதாரணமான சூழ்நிலைகளைக்கூட, நகைச்சுவையோடு விவரிக்கும் அசாத்தியத் திறன் கொண்டது அவரது எழுத்து. அது வெறும் எழுத்தல்ல, கோமா பேஷண்டையும் காமாசோமாவெனச் சிரிக்க வைத்திடும் சக்தி கொண்ட ஹாஸ்ய மந்திரம்.
வயிறு குலுங்கச் சிரித்தல், விழுந்து புரண்டு சிரித்தல், கண்ணில் நீர்வரச் சிரித்தல், சூழ்நிலை மறந்து சிரித்தல், இன்னும் சிரித்தலில் என்னென்ன வகையுண்டோ அத்தனையும் இந்தப் புத்தகத்தில் சாத்தியம்.
அண்ணாநகர் டைம்ஸ், மாம்பலம் டைம்ஸ் ஆகிய பிராந்திய வார இதழ்களில் தொடர்ந்து ஐநூறு வாரங்களுக்கும் மேல் வெளிவந்து கொண்டு இருக்கும் 'தமாஷா வரிகள்' பத்தியின் சமீபத்திய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.