தன் கணவனை பிரிந்து தனியாக வசிக்கும் சௌந்தர்யா வீட்டின் மாடிக்கு திவ்யா தனது குழந்தை கோபியுடன் குடிபெயர்கிறாள். சௌந்தர்யாவும் திவ்யாவும் உடன்பிறவா சகோதரிகளாகிறார்கள். சௌந்தர்யா தன் கணவனுடன் மீண்டும் புது வாழ்க்கையை தொடங்கும் நேரத்தில் திவ்யாவின் திடீர் உடல் நலமின்மையால் தனது கிட்னியை தனது கணவனுக்குத் தெரியாமல் கொடுத்து காப்பாற்றுகிறாள்.
வீட்டிற்கு வந்த திவ்யா தனது அண்ணன் பிரபாகரனுக்கு கடிதம் எழுதி வரவைக்கிறாள். பிரபாகரன் சௌந்தர்யாவைப் பார்த்ததும், தன் தங்கை திவ்யாவிற்காக தான் அவளுக்கு இழைத்த துரோகத்தை நினைத்து செய்வதறியாது திகைக்கிறான்.
சௌந்தர்யாவும் அவள் கணவனும் இணைவார்காளா? சௌந்தர்யாவிற்கு பிரபாகரன் இழைத்த துரோகம் என்ன? திவ்யாவின் வாழ்க்கையில் நடந்த மர்மம் என்ன? மேலும் பல திருப்பங்கள் நிறைந்த கதைகளுடன்.